Saturday, August 29, 2009

ஆதி...

காயாம்பு வீட்டுக்கு
பக்கத்து வீடு
ஆச்சி வீடு.

ச்சி வீட்டில் இருந்து
பார்த்தால் தெரியும்
உடைசா ஊரணி.

ரையிலேயே வந்தால்
கோஹலே ஹால் தெரு.

தெருக்கோடியில்
செல்வ விநாயகர் கோவில்.

கோயிலுக்கு வரும்
ராமக்கா வீட்டு
புவனா.

புவனா பறித்த
மஞ்சள் அரளி.

ரளி வேரில்
இன்னும் கிடக்கலாம்

காலச்செதில் உதிர்ந்த
முதல் முத்தம்.
முதல் அறை.
முதல் தேம்பல்.

Wednesday, August 26, 2009

நிலா போற்றுதும்




ல்லா
குழந்தைகளுக்கும்
சோறூட்டுகிறது
தனி ஆளாய்
ஒரு நிலா.

ச்சிக்கிளை
கூட்டிலுள்ள
குருவிக்குஞ்சுகளுக்கு
இன்னும்
அருகில் இருக்கிறது
இந்த
நிலா.

பாட்டி
வடை சுடுகிறாள் என
காட்ட வேண்டி
ஆள் தேடி அலையும்
அத்துவான
காட்டிலொரு
நிலா.

குழந்தைகளை நடுவில் கிடத்தி
காட்டி காட்டி கதை சொல்லும்
மொட்டை மாடி தகப்பன்களை
மனைவியறியாது நேசிக்கிறாள்
மற்றொரு நிலா.

மிக அழகு நிலா
மிக்க அழகு
பார்ப்பவர்கள்!

Saturday, August 22, 2009

பிரியமானவர்களுக்கு



(photo by CC licence #)

வசரமில்லை
ஒழிந்த நேரங்களில்
தேடுங்கள்

ஞாபக பரணில்
நினைவு சேந்தியில்
தோட்டத்தில்
வெளித்திண்ணையில்
காலணி இடும் இடத்தில்

நீங்கள் அறியாது
நிகழ்ந்ததாகத்தான்
இருக்கும்

றந்த
மயிலிறகின் பீலியை போல்
கிடைக்கிறதாவென
பாருங்கள்

கிடைக்காது போகிறபோது
மட்டுமே
இறைஞ்சுகிறேன்

ன் பிரியமானவர்களே....

ருமுறைக்கிருமுறை
யோசியுங்களேன்
தூக்கி எறியும் முன்பாக
என்னை

Thursday, August 20, 2009

காட்சி வழி...


(Photo by CC Licence, Thanks neoliminal)

லையில் இருந்து
தொப்பி பறித்து
தலையில் அணிந்து
"சல்யுட்" என்கிறாள்.
யிறு தவ்வ சிரிக்கிறார்
காசி ஏட்டையா.

"டையை பார்த்துக்கிறேன்
நல்ல டீயா சாப்பிட்டு வாண்ணே"
தலை கலைத்து சிரிக்கிறாள்
டீ கடை மாரி அண்ணனை.
சவு சொல்லி சிரிக்கிறார்
மாரி அண்ணனும்.

"ன்னத்தை பார்க்கிற
நானும் பொம்பளைதேன்"
வேறு முகத்தை தெறிக்கிறாள்
திரும்பி பார்க்கும் யுவதியிடம்.

நீதிமன்ற சுவற்றை
கீறி
துளிர்க்கிறது
வேம்போ
விருட்சமோ.

யந்து பயந்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
வெறும்
காட்சியை.

தைரியமாய்
வாழ்ந்துபார்த்துகொண்டிருக்கிறது
தீரா
வாழ்வு.

Monday, August 17, 2009

அனுபவ நீதிக்கதை (தொடர்ச்சி..)

"ஸ்" என அவள் எழுந்து எங்கள் மூவரின் கை பற்றி குலுக்கினாள். என முன்பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.. அதில் ஒரு சின்ன கண்ணாமூச்சி இருக்கிறது. முன்பதிவிற்கு வந்த நீங்கள் பின் பதிவிற்கும் வருகிறீர்களா, அப்படி வரும் பட்சத்தில் என் ட்விஸ்ட் உணர்கிறீர்களா எனபதுதான் அது. அந்த ட்விஸ்ட்டில் இருந்தே தொடங்கலாம்.

மூன்றாவதாக என்னிடம் நீட்டிய அம்மணியின் கையை தவிர்த்து நான் கை கூப்பினேன். என் இலக்கு வேறு எதுவும் இல்லை. மற்ற இருவரில் இருந்து என்னை தனித்து காட்ட கைவசம் வேறு இருப்பு இல்லாததுதான்.

ம்பது வயதை நெருங்கும் அந்த அம்மணி பேன்ட் சட்டை அணிந்து, கிராப்பு வெட்டிய கே.ஆர்.விஜயா போல இருந்தாள். மேலும், ஒரு திரைப்படத்தில், கே.ஆர்.விஜயா தன் தோழிகளில் இருந்து தன்னை தனித்து காட்ட ஜெயசங்கரின் நீட்டிய கரத்தை உதாசினம் செய்து கரம் கூப்பியதும் கூட காரணமாய் இருக்கலாம். என் நினைவிற்கும் எனக்கும் எப்பவும் நேரடி தொடர்பு உண்டு. எதிர்பார்த்தது போலவே அம்மணி என்னை தனித்து பார்வை இட்டது திருப்பதியாக இருந்தது.


(photo by CC licence Thanks #)

பொடியன்கள் இருவரும் "அட பதரே" என்பது போல பார்த்தார்கள். யார் எப்படி பார்த்தால் என்ன நமக்கு இலக்கு -வெற்றி!.. இல்லையா?சிரித்தபடியே அம்மணி, மூவரிடமும் கேள்விகளை தொடங்கினாள். கேள்வி மூன்று பேருக்கானதாக இருந்தாலும், பதில் என்னவோ இரண்டு பேருக்கானதாகவே இருந்தது. நான் விலை உயர்ந்த மரத்தினால் கடையப்பட்ட சிற்பம் மாதிரியான ஒரு புன்னகையை அணிந்து, அவ்வபோது நண்பர்களின் பதில்களை ஆமோதிப்பது மாதிரியான தலையாட்டலுடன் இருந்தேன்.

லையாட்டல், ஐந்து நட்சத்திர ஹோட்டலில், கனவான்களை வரவேற்க கதவுதிறப்பவரின் தலையாட்டலை விட சற்று தாழவும், பிரேதத்தை விட சற்று மேலானதாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். புத்திசாலித்தன போட்டி உண்மையில் எனக்கும் அந்த அம்மணிக்கும் இடையில் தான் என்று உணர்வதை நம்பாமல் இருக்க விரும்பினேன். விருப்பு வேறு யதார்த்தம் வேறுதானே எப்பவும்.

பொடியன்களிடமிருந்து கேள்விகள் குறைந்து என்னை நேராக பார்க்க தொடங்கினாள் அம்மணி. வயிற்றில் உருளும், "ஈம்முச்சை ... எலும்புச்சை... டண்டாங்கி டாமுச்சை" யை காட்டிகொள்ளாமல் அண்ணலும் நோக்கினேன். ஒரு மாதிரியான அனுமானத்திற்கு வந்தது போல, சாய்வு நாற்காலியில் மேலும் சாய்ந்து அமர்ந்தாள். அந்த சாய்வு உண்மையில் எனக்கு அறவே பிடிக்க காணோம். உங்களுக்கும் அது பிடிக்க வேணாம். இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் உங்களுக்கு. ஒன்று என்னை பிடிக்க வேணும் அல்லது அம்மணியின் அந்த சாய்வை பிடிக்க வேணும். நீங்கள் என் பக்கமாக இருப்பதால் மேற்கொண்டு பேசலாம்தான் நான்.

"ங்க பேர் என்ன சொன்னீங்க" என்றாள் நேரிடையாக என்னை பார்த்து. முதுகில் விழும் குத்தை விட மார்பில் விழும் குத்து நிலை தடுமாற செய்யும்தானே நீங்களாய் இருந்தாலும் நானாய் இருந்தாலும். படு போரில் ஒப்பாரி ஏது என்பதாலும் abcd க்கும் முந்தி பிறந்த ஆங்கிலம் இது என்பதாலும்.. என் பெயர் சொன்னேன்.

"ந்த ஹோட்டலில் வேலையில் இருந்தீர்கள்" என்றாள்.

" ஸ்" என்றேன்.

"சாரி" என்று நாற்காலியில் இருந்து எழுந்து அவளின் காதை என் வாயின் அருகாமையில் கொண்டு வந்தாள். வலது கையை வேறு ஒலி சிதராதபடிக்கு அணை கட்டி நின்றாள். (நல்ல நறுமணம்... கேட்டீர்களா..)

வ்வளவு அருகாமையில் காதை பார்த்தால்,நான் எப்பவும், "குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...." என கத்த விரும்புவேன். விருப்பத்தை நிறைவேற்ற முடியாத வாழ்வு நெருக்கடியை என்ன சொல்ல.. நடப்பு என்னை உசுப்ப, விடாபிடயாக..

"ஸ்" என்றேன் மீண்டும்.

ந்த விடாபிடி "எஸ்"ல் சில பல தேடல்கள் இருந்தது. ஆங்கிலம் புரிவதில் குளறுபடி இல்லை எனக்கு. மறுமொழிதான் சற்று சிக்கும். மறுமொழி போலவே எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட்டில் இருந்த புகழ் அண்ணனின் ஹோட்டல் பெயர் அவசரத்தில் மல்லாந்து சிக்கிகொண்டது. ஒரு நேர்முக தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாவிட்டாலும், கேள்வியை நாம் எப்படி அணுகுகிறோம், கேள்வியில் இருந்து எப்படி நாம் விடுபடுகிறோம் என்பதை கேள்வியாளர்கள் பார்ப்பார்கள் என்பதை முன்பே நான் கேள்விபட்டிருந்தேன். புகழ் அண்ணன் அனுப்பி தந்த லெட்டர் பேட் தாள் அறையில் இருந்ததை தைரியமாக உணர்ந்தேன். அதே நேரம் என் வாயில் இருந்து வருகிற பதில்தான் இனி முதன்மையானது என்பதையும் நான் உணராமல் இல்லை. ஞாபக சீக்கு கொண்ட கோழியை மிரட்டும் தொணியில்,

"ங்களைதான் கேட்கிறேன், எந்த ஹோட்டலில் வேலையில் இருந்தீர்கள்"

னி தாமதிப்பது உதவாது என்று உணர்ந்த நான்..

"ருப்பையா புரட்டா கடை, காந்தி வீதி" என்றேன் கூடுமானவரையில் ஆங்கிலத்தில்.

"வாட்?" என்றாள் மீண்டும் நெருக்கம் கூட்டி...

றுதிபட கூறினால் அறுதிபடுமோ என சந்தேகித்த நான் மீண்டும்,..

"ஸ்" என்றேன்.

ந்த தள்ளுமுல்லை உணர்ந்த கபிலன் என்கிற பொடியன், நல்ல சூட்டிகை என்பதாலும் அவன் வாழ்வும் என்னுடன் பிணைக்க பட்டிருப்பதாலும், எனக்கு எடுத்து கொடுக்கும் முகாந்திரமாக ஹோட்டல் பெயர் சொன்னான்..

ம்மணி, அன்றைய பொழுது அவ்வளவு ரம்மியம் என்பதுபோல் ஒரு பெருமூச்சை விட்டாள். பிறகு யாரையோ பெயர் சொல்லி அழைத்தாள் வந்த சப்பை மூக்கு காரனிடம், ஒரு மெனு வாசித்தாள். ஆகட்டும் என்பதாக அவன் மறைந்தான்.

வள் கூறியதில் "பிளேட்" என்பது மட்டும் விளங்கியது. முகம் பார்த்து படிப்பதில் வல்லவன் என்கிற நம்பிக்கை என்னிடம் இருந்ததால் பொடியன்களின் முகம் பார்த்து மொழி உணர முற்பட்டேன்.

"விடிந்தால் தூக்கு" என்கிற முகச்சாயலில் இருந்தார்கள் இருவரும். மதுரை பேருந்தும் "கை கொட்டி சிரிப்பார்கள் " பாட்டும் தேவை இல்லாமல் வந்து போய் கொண்டிருந்தது.

ப்பை மூக்கு காரன் வந்தான். வெளுத்த உருப்படி கொண்டுவருகிற மூர்த்தி, "முண்டா பனியன் சிறியது ஒன்று, பெரியது ஒன்று, கைவச்ச பனியன் சிறியது ஒன்று பெரியது ஒன்று" என்று டிக் அடிக்க வசதியாக வாசிப்பது போல்...

"பீங்கான் தட்டு ஒன்று, கரண்டி பெரியது ஒன்று சிறியது ஒன்று, கத்தி பெரியது ஒன்று சிறியது ஒன்று, முள் கரண்டி பெரியது ஒன்று சிறியது ஒன்று" என்று வாசித்து மேசையில் வைத்தான். வைத்துவிட்டு போயிருந்தால் கூட அவனை எனக்கு பிடித்திருக்கும். அம்மணியின் பின்புறமாக நின்று கொண்டான். காசு வைத்து சீட்டு விளையாட துப்பில்லாதவர்கள், விளையாடுபவர்களின் பின்புறமாக நின்றுகொண்டு தன் அரிப்பை போக்கி கொள்கிற மனிதர்கள் எல்லா தேசத்திலும் உண்டு போல. நேர்மை அற்றவன்..

ற்கனவே பொடியன்கள் படம் வரைந்து பாகம் குறித்து தந்திருந்ததாலும்.. அவர்கள் தராத தைரியம் என்னிடமிருந்ததாலும்... ஏற்கனவே மொழி பிரச்சினையில் தோல்வியை தழுவிய அவமானத்தினாலும்,.. ஒரு பிரச்சினையை விரைவில் முடிவிற்கு கொண்டுவர வேணும் என்கிற நியாயத்தாலும்,.. முட்டிக்கொண்டு நிற்கிற முதல் இயற்கை உபாதையாலும்.. பர பரவெ
வை ராஜா வை விளையாட்டிற்கு தயாரானேன்.

தேர்ந்த கலைஞனை போல் தட்டை வைத்து மற்ற கருவிகளையும் தோராயமாய் அதனதன்(!!!) இடத்தில் வைத்தேன்.

நிமிர்ந்து அம்மணியை பார்த்தேன்.

"ப்படிதான் உங்கள் ஹோட்டலில் வைப்பார்களா?" என்றாள் மைனா மாதிரியான அடிக்கண் பார்வையில்.

ப்படிகூட வைப்பார்களே என்பது போல் தட்டில் வலப்புறம் இருந்த கரண்டியை இடப்புறமும், இடப்புறம் இருந்த கத்தியை வடப்புறமும் மாற்றினேன்.

"ஹோ" என்றாள் சற்று சாந்தமாகி.


(photo by CC licence Thanks #)

"ஹோ" சொல்கிறபோதெல்லாம் கேள்விக்கு மறு பதில் உள்ளது என்பதை விவேகானந்தா பள்ளி, சிவகாமி டீச்சரிடம் நான் பயின்றிருப்பதால் தட்டை மட்டும் நகர்த்துவதை தவிர்த்து மற்ற சகல சாமான்களையும் வடபுறம், தென்புறம், வட மேற்கு, தென் கிழக்கு, என மாற்றி கொண்டே இருந்தேன். என் அனுமானத்தில் நான் சரியாக காய் நகர்த்தி கொண்டுதான் இருந்தேன். "செக் மேட்" மட்டும் வரவே காணோம். முற்று புள்ளி அவளிடம் இருந்ததால் முயற்ச்சியை மட்டும் நான் கைவிடவே இல்லை. போலவே, நல் மரத்தில் செய்யப்பட என் புன்னகையையும். விளையாட்டு புளித்திருக்கும் போல... மீண்டும் கேள்விகளை தொடங்கினாள்.

"ந்த ஏஜன்சி உங்களை அனுப்பியது" என்றாள் மற்ற இருவரையும் பார்த்து. பொடியன்கள் இருவரும் புகைபடமாக மாறி இருந்தார்கள் வெகு நேரம் முன்பாகவே... நானே பதில் சொன்னேன்.
"அனிதா & மிஸ்ஸஸ் கோவாபரேட்டிவ் ஏஜன்சி அட் அண்டார்டிக் ஓசன்" என்றேன் (அனிதா மற்றும் மனைவியின் கூட்டு முயற்ச்சியை அண்டார்டிகா பெருங்கடலில் அமிழ்த்துங்கள் என்பதற்கு வேறு ஆங்கிலம் இல்லை தானே) வயிறு எரிந்தது எனக்கு...

"ண்மையை சொல்லி விடுங்கள். இது சவூதி மன்னரின் மகனுடைய அரண்மனை என அறிவீர்களா?... உண்மையை சொல்லி விட்டால் தண்டனை ஒன்றும் இருக்காது. இந்த அலங்கோலத்தை அமீரா (பிரின்சஸ்) பார்த்தால் கண்டிப்பாக சிறை செல்ல நேரிடும். பிறகுதான் ஊர் போவீர்கள்" என்று அம்மணி சொன்ன அந்த தருனமோ, சிறை தந்த பயமோ என் சக்தி திரள தொடங்கியது. எப்பவும் எனை கை விடாத "உண்மை" என்கிற சக்தி! நான் பேச தொடங்கினேன்...

".. டெல்.. ட்ரூ..." தந்தி பாஷை போதும்தானே சாவு உணர்த்த.

"கே" என்றாள்.

ன் மொழியை வாசிக்க இயல்கிறது என்பதை உணர்ந்ததும் சரசர வென பேச்சு வர தொடங்கியது. சகலமும் சொன்னேன். இந்த சதியில் இவர்கள் இருவருக்கும் பங்கில்லை. இவர்களின் தகுதியை நீங்கள் பரிசோதித்து அறியலாம். நீங்கள் என்னிடம் இருந்து தொடங்கியது இவர்களின் துரதிர்ஷ்ட்டம் கூட" என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தேன்.

ற்று நேரம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அம்மணி" எவ்வளவு பெரிய தவறு செய்திருகிறீர்கள் தெரியுமா?" என்றாள் என்னை பார்த்து.

ங்கிருந்துதான் இந்த நீதி கதை தொடங்குகிறது.

"தெரியும். ஆனால் நான் கடவுளின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவன். நான் எங்கு போனாலும் எனக்கு வழி ஏற்படுத்தி தருவார் என் கடவுள்" என்றேன்.

"ன் கடவுள் இங்கு எங்கிருக்கிறார்" என்றாள்.

"தோ" என அம்மணியை காட்டினேன்.

காட்டும் போதே என் கரத்தையும் நீட்டினேன். முன்பு தவிர்த்த அதே கரத்தை.


(photo by CC licence Thanks #)

ற்று நேரம் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அம்மணி.. சட்டென சிரிக்க தொடங்கினாள். அவள் சிரிப்பில் அவளின் புத்திசாலிதனங்கள் கரைவதை கண் கூடாக கண்டேன் (முக ஒப்பனை களிம்பு மட்டும் அங்கேயேதான் இருந்தது) இடம்.. வலம்.. குனிந்து.. நிமிர்ந்து என வெகு நேரம் வரையில் சிரித்தவள் நிதானம் பெற்ற போது, செய்வதறியாது நீண்டிருந்த என் கரம் பற்றி இருந்தாள்.
ஆச்சு.. இதோ ஏழு வருடம் முடிந்து விட்டது.

நீதி
===
ரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்.
வென்ற வார்த்தை நீதிக்கதை இது.
கொன்ற வார்த்தை நீதிக்கதை...மற்றொரு நீதிக்கதையில்.

அன்பும் நன்றியும்...
பாரா

Friday, August 14, 2009

அனுபவ நீதிக்கதை

முக ஒப்பனை களிம்புகளோடு, புத்திசாலிதனத்தையும் கலந்து முகத்தில் பூசியிருந்தது போல் இருந்தாள் அந்த அம்மணி. முக ஒப்பனை களிம்புகள் குறித்து எனக்கு கவலை இல்லை. அது அவளின் சுதந்திரம். புத்திசாலித்தனம் கலந்ததுதான் எனக்கு எதிரான சதியோ என கலங்கினேன்.

"ஸ்" என அவள் எழுந்து எங்கள் மூவரின் கை பற்றி குலுக்கிய அந்த தருணத்தை அப்படியே ப்ரீஸ் (freeze) செய்து விடுங்கள். பிறகு பின்புறமாக ஒரு மாதகாலம் வரவேணும் நீங்கள். பின்புறம் என்றால் முதுகு முன்னால் வருவதுபோல் பின்புறமாக நடந்து வருவது அல்ல. ஒரு மாத காலத்தை பின்புறமாக நகர்த்துவது. பிளாஷ்பாக்!.. இங்கு நீங்கள் "இச்" கொட்டுவது அனாவசியம். இது பாம்பு-கீரி கதை இல்லை. இடையில் விலகினால் ரத்த வாந்தி பயமில்லை. விலக விரும்புகிறவர்கள் இங்கு விலகலாம். (விலக இந்த சுட்டியை அழுத்துக). ஆனால் ஒன்று, ஒரு பேரனுபவத்தை, வாழ்வில் எதிர்படும் முட்டுச்சுவற்றை எப்படி நீங்கள் கடக்க போகிறீர்களோ என உங்களை பார்த்து நான் பரிதாப பட வேண்டியிருக்கும். கூட வர சம்மதமெனில் இந்த இச் கொட்டுற பிசினசெல்லாம் விட்டுவிட்டு சமர்த்தாய் நான் சொல்லுவதை கேளுங்கள். ஆச்சா... வந்துட்டிங்களா.. இனி கேளுங்கள்.

து சுவராசியம் கலந்த ஒரு திரு நாள். மனைவி, சிரித்த முகத்துடன், "ஏங்க உங்களை பாஸ்போர்ட்டை எடுத்து கொண்டு மதுரை வர சொல்லி போன் பண்ணினாள் அனிதா" என்று சொன்னாள். மதுரை போவது சுவராசியம் இல்லை. மனைவியின் சிரித்த முகம் சுவராசியம். பேருந்தில், "கை கொட்டி சிரிப்பார்கள்... ஊரார் சிரிப்பார்கள்..." என எம்.எஸ்.வி. கதறியது ஒரு குறியீடாகவோ, சகுன கேடாகவோ எடுக்கிற மன நிலையில் இல்லை அப்போது. மனைவியின் சிரித்த முகத்திற்கு முன்பாக சகுனகேடோ, குறியீடோ தட்டுபடுவதில்லைதானே.

(Photo by CC licence Thanks #)

"ராஜா அத்தான் சவூதி போறீங்களா? ஒரு பேலசில் வெயிட்டர் வேலை. ஷாமினி அப்பா மாலத்தீவில் இருந்து போன் பண்ணாரு. அங்க ஒரு பிரின்சஸ் வந்து தங்கி இருக்காங்களாம். இவர் செய்யிற ஸ்வீட் பிடிச்சு, இவரை அந்த பேலசுக்கு வேலைக்கு கூப்பிட்டு இருப்பாங்க போல. இவருக்கு அங்க போக விருப்பம் இல்லை. ஆனாலும் நயந்து பேசி மூணு விசாவுக்கு சொல்லி இருக்காரு. அவங்களும் சரின்னுட்டாங்கள் போல. பக்கத்தில கபிலன்னு ஒரு பையன், கேட்டரிங் முடிச்சுட்டு இருக்கான். அண்ணன்ட்ட சொல்லி வேலை எதுனா வாங்கி தாங்கக்கான்னு சொல்லிகிட்டே இருந்தான். இவர் பிரண்டோட பேமிலி பிரண்ட் ஒரு பையன், அவனும் கேட்டரிங் முடிச்சிருப்பான் போல... உங்களையும் சேர்த்தா மூணு பேரு... இங்கிலீஸ் பேசுவீங்கள்ள" என்று நிறுத்தியது அனிதா.

து அநியாயமாகபட்டது எனக்கு. முனியாண்டி விலாஸ், கருப்பையா மெஸ் தாண்டி உணவருந்துவதில் அசவுகர்யம் கொள்பவன் நான். வசந்தபவன் மாதிரியான உணவகங்களுக்கு செல்ல நேரிடுகிற சந்தர்ப்பங்கள் என் வாழ்வில் வந்திருந்தாலும், அந்த சீருடை வெயிட்டர்கள், எனக்கு அவர்களும் அவர்களுக்கு நானும் முன் பகை இருப்பது மாதிரியான ஒரு உணர்வை அனுபவிப்பவன். மேலும் வடை விள்ள உபோயோகபடுத்தும் கொலை கருவிகளை சட்ட திட்டங்களுக்குட்பட்டு உபயோகித்தறியாதவன் நான்.

வேறு நபர் எனில் தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி இருப்பேன். அனிதா, மனைவியின் தங்கை. கொழுந்தியாள்களின் முன் எந்த அத்தான்கள் தோல்வியை ஒப்பு கொள்ள இயலும். என்றாலும்... "அது இல்லை அனிதா, இங்கிலீஸ் பேசிரலாம். அந்த ரெண்டு பசங்களும் கேட்டரிங் படிச்சிருக்காங்கன்னு சொல்றே.. எனக்கு இது பத்தி ஒன்னும் தெரியாதே... என்னை எப்படி இதுல சேர்த்த" என்றேன் அப்பாவியாய்.

"மா, இப்படியே பேசிக்கிட்டு இருங்கத்தான். பொம்பளை புள்ளையை வச்சிருக்கோம்.. ஊரை சுத்தி கடன் இருக்கேன்னு நினைங்க.. எல்லாம் தானா வரும். புகழ் அத்தான் ஹோட்டல்ல இருந்து ஒரு லெட்டர் பேட் தாள் கிழிச்சு அனுப்ப சொல்லியிருக்கேன். எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகட்டை அதில் டைப் செஞ்சுக்கலாம். மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன். தயவு செஞ்சு நீங்கள் இன்டர்வியு மட்டும் நல்லா பண்ணுங்க" என்ற அனிதாவின் முகம் சற்றேறக்குறைய மனைவியை காட்டியது. நாக்கு துருத்தல் மட்டும் இல்லை.

" ன்டெர்வியுவா?"என்றேன். வீதியில் கிடக்கிற ஐந்து வயது சிறுவனின் மலத்தை மிதித்தது போல.
(Photo by CC licence Thanks #)

"போன்லதான்த்தான். ரெண்டு நாளுக்குள்ள அப்துல் ரஹ்மானுன்னு ஒருத்தர் கூப்பிடுவாரு. வேலை பாக்குறது பைவ் ஸ்டார் ஹோட்டல்லதான். மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு சொல்லுங்க. பேசாம இங்க தங்குரீங்களா, அவரை இங்கு பேச சொல்லலாம்" என்று கேட்டது அனிதா.

"வேண்டாம், வேண்டாம். கொடுத்தபடியே இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன்" என்று மறுத்தேன் அவசரமாய். மனைவியின் சிரித்த முக ரகசியம் அம்பலமான வலியோடு ஊர் திரும்பினேன்.

ரண்டு நாள் முன்பான தீபாவளி சிறுவனை போல போனுக்கு குதுகலமாக காத்திருக்க தொடங்கினேன். இந்த குதூகலத்திற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று, மனைவிக்கு முன்பாக ஆங்கிலம் பேசுவது. மற்றொன்று, மனைவிக்கு அறவே ஆங்கிலம் தெரியாது என்பது. மனைவியும் , அனிதாவும் பின்னிய மாய வலையை அறுத்தெறியும் சூட்சுமம் என் கையில் இருக்கிற சுதந்திரத்தை நான் வெகுவாக ரசித்தேன்.

போனும் வந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரு வார்த்தையில் பதில் சொல்லி இருக்கலாம் நான். சந்தர்ப்பத்தை நழுவ விட நான் தயாரில்லை. "is, was, and, the, right turn, left turn, attention, right about turn, moove to the right in threes" போன்ற முழு, முழு வார்த்தைகளோடு, "a,e,i,o,u," என்கிற வவ்வல்ஸ் தூவி, ஒரு மாதிரியான வாக்கிய தோரணம் அமைத்து, கடலுக்கு அப்புறமாக இருக்கிற அப்துல் ரஹ்மானுக்கு மாலையாக அணிவித்தேன். அப்துல் ரஹ்மானின் முகம் பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது. மாறாக.. வலது புருவத்தை உயர்த்தி சற்று அசால்ட்டாக மனைவியை பார்த்தேன். குலசாமியை கண்ட களையில் இருந்தாள் அவள். வழக்கம் போல குடித்துவிட்டு வந்த அன்றிரவுகூட ஒரு வார்த்தை பேசவில்லை அவள். மாறாக, எனக்கு பிடித்த கோழி கறி, சப்பாத்தி செய்து வைத்திருந்தாள். அன்னிய மொழி வலிதுதான் போல....

"ரு அப்பா-அம்மாவிற்கு பிறந்திருந்தால், அந்த அப்துல் ரஹ்மான் இனி ஆங்கிலம் பேச மாட்டாண்டா" என நான் நண்பர்களுடன் பேசி சிரித்ததெல்லாம் வீணாக போயிற்று. ஆம்!.. மீண்டும் ஒரு போன் வந்தது "கேஸ் சிலிண்டெர் ரெடியா இருக்கு வந்து தூக்கிட்டு போங்க... பலசரக்கு பாக்கி எப்ப வரும்" என்பது மாதிரியான போன் மட்டும் பெரும்பாலும் வருவதால், போன் எடுப்பதில் எனக்கும் மனைவிக்கும் மறைமுக போட்டி இருக்கும். போன் மணியை கேட்க்காதது போல இருப்பதில் மறைமுக போட்டி!.. இந்த மாதிரி போட்டியில் பெரும்பாலும் நானே வெற்றி பெறுவது உண்டு. வலிந்து போர்த்திக்கொண்ட எருமை தோல்...

"ப்படியா...அப்படியா" என மனைவி உற்சாகமாய் கேட்டுகொண்டிருந்தது வழமைக்கு மாறாக இருந்தது... பெப்சி உமா இவளை பாட சொல்கிறார்களோ என்கிற பதட்டம் வேறு இருந்துகொண்டிருந்தது. போனை வைத்ததும், "ஏங்க, எந்திரிங்க.. அனிதாதான் பேசினாள். நீங்க இண்டேர்வியுவுல பாசாம். நாளைக்கு பாம்பே போகனுமாம்... விசா அங்க ரெடியா இருக்காம். ஒரு வாரத்திற்குள் நீங்க சவூதி வரணுமாம்"

யோசியுங்கள் அன்பர்களே. என் இடத்தில் நீங்கள் இருந்தாலும் இதையேதான் யோசிப்பீர்கள். "மனைவி,அனிதா,அப்துல் ரஹ்மான் எல்லோரும் கூட்டோ?"... அதையேதான் நானும் யோசித்தேன். கூடுதலாக, மற்றொரு யோசனையும் இருந்தது. இன்டெர்வியுவில் நான் பேசிய ஆங்கிலத்திற்காக "கை எட்டும் தூரத்திற்கு வரட்டும் அவன்" என்று அப்துல் ரஹ்மான் விரும்புகிறாரோ என்று பலவாறு யோசித்து கொண்டிருக்கும் போதே, சவூதி வந்து விட்டது.

(Photo by CC licence Thanks #)

மும்பை போகிற வழியில், திரும்புகிற வழியில், ஏர்போர்ட்டில், விமானத்தில் என நேரம் கிடைக்கிற போதெல்லாம் பொடியன்கள் இருவரிடமிருந்தும் கேட்டரிங் மொத்தத்தையும் கிரகித்து விட முயற்ச்சி செய்து கொண்டே இருந்தேன். அனிதாவும் "டேய்.. அவருக்கு எதுவும் தெரியாதுடா... எல்லாம் சொல்லி கொடுங்கள்" என்று கேட்டிருந்தது. பொடியன்கள் என்றால் பாம் பொடியன்கள். கல்லூரி முடித்த கையோடு வந்திருப்பான்கள் போல. பிரபலமான பாட்ஸ் மேன்களுக்கு பின்னால் கிட்பேக் தூக்கிக்கொண்டு வருகிற தாத்தாபோல வந்து கொண்டிருந்தேன் அவர்களோடு. ஒரு கட்டத்திற்கு மேல் பொடியன்கள் சொல்லித்தருவதில் சுணக்கம் காட்டுவது போல உணர்ந்தேன். கையூட்டு கொடுத்து, சீட் வாங்கி, மூன்று வருட படிப்பெல்லாம் மூன்றே நாளில் என் சாக்கு பைக்குள் திணிக்க திணர்கிரார்களோ என்கிற "ஆசிரிய சந்தேகமும்" இருந்தது. மேலும் சக பயணியிடம் நான் வெறும் சாக்கு பை மட்டும் இல்லை என்கிற கௌரவ பிரச்சினையும் குறுக்கிட்டதால் கெத்தாக இருந்துவிட தீர்மானித்தேன்.

வுதியில், குளிர் ஊட்டப்பட்ட அறை.. குளிர் சாதன பெட்டி.. தனி தனி கட்டில்.. டிவி.. இவை எல்லாம் பார்த்த சந்தோசத்திலும், காஸ் சிலிண்டெர், மளிகை பாக்கி போன் கால்கள் இல்லாத சவுக்கர்யத்திலும் மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. கடந்த மூன்று நாளில் ஒரே ஒரு அசம்பாவிதம் மட்டுமே நிகழ்ந்தது. இன்டெர்வியு செய்த அப்துல் ரஹ்மானுக்கு (அனிதா சொல்லியதால்) ஆளுக்கு ரெவ்வண்டு லுங்கியும், கொஞ்சம் லாலா கடை அல்வாவும் வாங்கி வந்திருந்தோம். அன்று மாலை அதை வாங்க வந்திருந்த அப்துல் ரஹ்மான் மேற்படி சாமான்களை பெற்று கொண்டு சும்மா போயிருந்திருக்கலாம். "மூன்று பேரில் யார் ராஜாராம் என்று கேட்டார்" இதில், பொடியன்களுக்கு என்மேல் வருத்தம்போல் தெரிந்தது. பொடியன்களை விட இதில் நான் வருந்தினேன் என்பதை பொடியன்களிடம் காட்டவில்லை. சகபயணி, சாக்குப்பை விஷயத்தில் சுதாரித்துவிட்டேன் என்று சொல்லி இருந்தேன்தானே.

று நாள் ஒரு தையற்காரர் வந்து அளவெடுத்து போனார். மூன்றாம் நாள் மாலையில் கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை, கழுத்தில் அணிய கருப்பு வவ்வால் மாதிரியான ஒரு சாதனம் கொண்டு வந்து தந்த மனிதரை நான் எங்கியோ பார்த்தது போல இருந்தது.

ரு திரைப்படத்தில் புரட்சி தலைவர் பெரிய மீசை வைத்து கன்னத்தில் மருவெல்லாம் ஒட்டி மாறுவேடத்தில் இருப்பார். மற்றொரு நபர், தலையில் வெள்ளை துண்டு போட்டு,மாட்டின் கருப்பு மூக்கணங்கயிற்றை துண்டு விழுந்துவிட கூடாது போல மூன்று சுற்று சுற்றி, புரட்சி தலைவரிடம் வந்து கை குலுக்கி, "வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்" என்று கேட்பார். அதற்க்கு புரட்சி தலைவர் கூட, "அவை யாவும் நமக்கே சொந்தம்" என்பார். பதிலில் திருப்தியுற்ற அந்த மூக்கணாங்கயிற்று மனிதர் கையிலிருக்கிற அந்த சின்ன பெட்டியை புரட்சி தலைவரிடம் தருவார்... கொஞ்சம் சிரமப்பட்டால் அந்த மனிதரை மீட்டெடுத்துவிட முடியும் ... முயற்ச்சி செய்யுங்கள்..

ச்சசல் அந்த மூக்கணாங்கயிற்று மனிதர்தான் மறுநாளும் வந்து பிரின்சசின் காரியதரிசி மோனாவிடம் அழைத்து போனார்.

மோனாதான் அந்த அம்மணி, முக களிம்பில் புத்திசாலித்தனம் கலந்து பூசிய அம்மணி!

(Photo by CC licence Thanks #)
--தொடரும்

Thursday, August 13, 2009

கடவுளும் நாமும்


(photo by CC license, thanks Original Nomad)

வசர அவசரமாய்
பேசி விலகுகிறோம்
அலுவலகம்
போகும் நாம்

டுதுறை-20
ஐ.ஆர்.-8
குதிரை சம்பா
பொன்னி
பூக்காத பருத்தி
தீஞ்ச தென்னை
பூச்சிமருந்து
கரும்பு திருட்டு
காகம் அப்பும் கடலை
வங்கி கடன்
பிள்ளைக்கு வாந்தி
பிறகு பேதி வேறு

"ன்னடா கெறக்கமா
இருக்கிற..மூதி
உனக்கு மட்டுமா
நொட்டையும் நொங்கும்
ஆக வேண்டியதை பாரு"

டுப்பில் நிமிண்டி சிரிக்கிறான்
வெளியில்
வியர்வை மணக்கும்
ஒருவன்

வ்வி விலகி
தாண்டி போகிறோம்
உள்ளில்
புழுத்து நாறும்
நாம்